×

விக்கிரமங்கலம் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்

 

தா.பழூர், நவ.7: விக்கிரமங்கலம் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் 2 பேரை கைது செய்தனர்.அரியலூர் மாவட்டம் கோவிந்தபுத்தூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் கலைச்செல்வி இவருக்கு கோவிந்தபுத்தூர் கொள்ளிடம் ஆற்று படுகை பகுதிகளில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கலைச்செல்வி மற்றும் கிராம உதவியாளர் செல்வபதி ஆகியோர் கொள்ளிடம் பகுதிக்கு சென்றனர் . அப்பொழுது எதிரே வந்த 2 மாட்டு வண்டிகளை மறித்து சோதனை செய்தனர். அதில் அரசு அனுமதி இன்றி சட்டவிரோதமாக மணல் கடத்தியது தெரிய வந்தது . இதனையடுத்து விக்கிரமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் .சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாட்டுவண்டிகளை கைப்பற்றி மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த குமணந்துறை வடக்கு தெருவை சேர்ந்த அருமைகண்ணு மகன் சங்கர் ( 41 ), ரெங்கநாதன் மகன் மகாலிங்கம் ( 60 ) ஆகிய இருவரையும் கைது செய்து விக்கிரமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விக்கிரமங்கலம் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Vikramangalam ,Tha.Bahur ,
× RELATED மதுரை அருகே போர் வீரன் நடுகல் கண்டுபிடிப்பு