×

பெரம்பலூர் மாவட்டத்தில் அவ்வையார் விருது பெற தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

 

பெரம்பலூர்,நவ.7: பெரம்பலூர் மாவட்டத்தில் அவ்வையார் விருதுபெற தகுதியுள்ளவர்கள் விண் ணப்பிக்கலாம்- என மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவி த்திருப்பதாவது : அவ்வையார் விருது 8 கிராம் (22கேரட்) எடை யுள்ள தங்கப் பதக்கம், ரூ1 ஒரு இலட்சத்திற்கான காசோலை, மற்றும் சான் றிதழ் வழங்கப்படவுள்ளது. பெண்களின் முன்னேற்றத் திற்கு சிறந்த சேவை புரிந்த பெண்கள் தமிழக அரசின் விருதுகள் (https;//awards.tn.gov.in < http://awards.tn.gov.in/ >) என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக் கலாம். விண்ணப்பிப்ப தற்கான கடைசி நாள் வருகிற 20ம் தேதியா கும்.விண்ணப்பதாரர்கள் தமிழ் நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும்,18 வயதிற்கு மேற்பட்டவராக வும் இருத்தல் வேண்டும்.

குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க் கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண் பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைக ளில் மேன்மையாக பணி புரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவ லகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பெரம்பலூர் என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தை நேரிலோ அல்லது 04328-296209 என்ற தொலைபேசி எண்ணின் மூலமாகவோ தொடர்பு கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு கலெக்டர் அதில் தெரிவித்துள்ளார்.

 

The post பெரம்பலூர் மாவட்டத்தில் அவ்வையார் விருது பெற தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Perambalur District ,Perambalur ,Collector ,Karpagam ,
× RELATED பெரம்பலூர் மாவட்டம்...