×

பொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரியில் நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்த 100 நாள் பணியாளர்கள்

 

பொன்னமராவதி,நவ.7: பொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரியில் 100 நாள் பணியாளர்கள் 100 பேர் நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்துள்ளனர். கலைஞர் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நூலகத்தில் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட நூலக அலுவலர் ஆணையிட்டுள்ளனர். இதனையடுத்து மேலைச்சிவபுரி மகாத்மா ஊரக வேலை பார்க்கும் மகளிர் நூறு பேர்களுக்கான தொகை ரூ.2000 நூலகரிடம் வழங்கினர். இதில் கிராம ஊராட்சி ஆணையர் கருணாகரன், ஊராட்சி மன்றத் தலைவர் மீனாள் அயோத்திராஜா, ஊராட்சி செயலாளர் நிறைமதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

The post பொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரியில் நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்த 100 நாள் பணியாளர்கள் appeared first on Dinakaran.

Tags : Melaychivapuri ,Ponnamaravathi ,Ponnamaravati ,Melaichivapuri ,
× RELATED காதலிக்குமாறு இளம்பெண்ணுக்கு...