×

பள்ளத்தில் தவறி விழுந்த பெண் பலி

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த எல்.எண்டத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரேச்சல்ரோக் ஷனா (36). இவரது, கணவர் சசிசாமுவேல். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை ரேச்சல்ரோக் ஷனா வீட்டில் இருந்து கடைக்கு செல்வதற்காக தனது இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, லாடக்கரணை என்ற பகுதி அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையோரப்பள்ளத்தில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. சாலையில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் வெகு நேரம் கழித்தப்பின் அந்த வழியாக சென்ற சிலர் பள்ளத்தில் விழுந்த கிடந்த ரேச்சல்ரோக் ஷனாவை மீட்டு உத்திரமேரூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ரேச்சல்ரோக் ஷனா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். தகவல் அறிந்த உத்திரமேரூர் போலீசார் ரேச்சல்ரோக் ஷனா உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பள்ளத்தில் தவறி விழுந்த பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Uttaramerur ,Rachelrok Shana ,L. Endathur ,Sasis Samuel ,
× RELATED இணையவழியில் ஆவணங்கள் பெற பழங்குடியினருக்கு சிறப்பு பயிற்சி முகாம்