×

ஈசிஆர் பண்ணை வீட்டில் வார இறுதி நாட்களில் கணவன் மனைவியை மாற்றி பாலியல் தொழில்: கோவை தம்பதி உட்பட 10 பேர் கைது: 8 பெண்கள் மீட்பு

சென்னை: ஈசிஆர் பண்ணை வீட்டில் வார இறுதி நாட்களில் ஜோடியாக வந்த பல பேர் கணவன், மனைவியை மாற்றிக்கொண்டு உடலுறவு கொண்டு சந்தோஷமாக இருந்துள்ளனர். இந்த எல்லை மீறிய பாலியல் தொழில் நடத்திய கோவை தம்பதி உட்பட 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் 8 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பனையூரில் ஒரு பண்ணை வீட்டில் கணவன், மனைவி எனக் கூறி பார்ட்டி நடக்கப் போவதாக ஆன்லைன் வாயிலாக நீச்சல் குளத்தோடு சேர்ந்த வீட்டினை சனி மற்றும் ஞாயிறு என 2 நாட்கள் வாடகைக்கு எடுத்துள்ளனர். இதில் சனிக்கிழமை கணவன், மனைவி என கூறிக்கொண்டு 8 போலி தம்பதிகளும், அவர்களுடன் வயதான 10 வயதானவர்களும் வந்துள்ளனர்.

இது குறித்து கானத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நேற்று முன்தினம் போலீசார் பனையூர் பண்ணை வீட்டிற்கு விரைந்தனர். கதவைத் தட்டச் சென்ற காவலர்களின் காதில் குத்துப் பாடல் ஒலிக்கும் சத்தம் கேட்டது. கதவை ஓங்கி தட்டியதும் கதவை ஒரு நபர் திறந்தார். காக்கி உடையை பார்த்தவுடன் பெண்கள் அரை குறை ஆடையுடன் அறையில் ஒளிந்து கொண்டனர். இதில் கையும் களவுமாக 8 பெண்கள், 15 ஆண்கள் சிக்கிக் கொண்டனர். அப்படியே பண்ணை வீட்டின் கதவை மூடிவிட்டு உள்ளேயே வைத்து அவர்களிடம் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (45), ஜெயலட்சுமி (36) என்ற தம்பதி கடந்த 2018ம் ஆண்டு முதல் முகநூல் பக்கத்தில் செபிவேல் என்ற பக்கத்தை உருவாக்கி அதிலிருந்து ரியல் மெரிட் பார்டி என்ற பக்கத்தை உருவாக்கி அதில் சிங்கில்ஸ்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், பாலுணர்வை தூண்டும் வகையிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பெண்களுடன் உறவு வைத்துக்கொள்ளலாம் என விளம்பரம் செய்துள்ளனர்.

மேலும் நடனம், மது விருந்து பார்ட்டி, நீச்சல் குளத்தில் உறவு என விளம்பரம் செய்து, சிங்கில்ஸ் அனைவரும் இன்பாக்ஸ் வரவும் எனப் போட்டுவிட்டு அவர்களை தங்கள் வலையில் வீழ்த்தி பெண்களை வைத்து பணம் சம்பாதித்து வந்துள்ளனர். தலா ஒரு நபருக்கு மது, மாது விருந்திற்கு ரூ.13,000 முதல் ரூ.20,000 பணம் வசூலித்து பார்ட்டி என்ற பெயரில் கணவன்-மனைவிகளை மாற்றிக் கொண்டு குழுவாக பாலியல் உறவு கொள்ளும் எல்லை கடந்த முறைக்கு பணம் பறித்து வந்துள்ளனர். இந்த தம்பதிகள் மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர், விருதுநகர், திருநெல்வேலி என பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்தனர். வீடுகளுக்கு தெரியாமல் மனைவிகளிடம் பொய் சொல்லிவிட்டு வந்திருந்த ஆண்கள் செய்வதறியாது திகைத்து போயினர்.

காவல்துறையினர் அவர்களது வீட்டிற்கு தெரியப்படுத்தி உறவினர்களை வரவழைத்து எழுதி வாங்கிக் கொண்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர். அதே போல் 8 பெண்களையும் அனுப்பி வைத்தனர். இதில் செந்தில்குமார் – ஜெயலட்சுமி தம்பதியை கைது செய்த விபச்சார தடுப்பு பிரிவு போலீசார், 8 பெண்களின் கணவன் எனக் கூறிய நபர்களையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 100க்கும் மேற்பட்ட ஆணுறைகள், பாலுணர்வை தூண்டும் மாத்திரைகள், மதுபாட்டில்கள், கஞ்சா, ஹூக்கா போன்றவற்றை பறிமுதல் செய்துனர். காவல்துறையில் சிக்கிக் கொண்டால் பர்த்டே பார்ட்டி எனக் கூறி அதற்கு பிறந்த நாள் இருக்கும் ஒரு நபரை உடன் வைத்துக் கொண்டு நூதன முறையில் 5 ஆண்டுகளாக இந்த விபச்சார தொழிலில் கொடி கட்டி பறந்துள்ளது இந்த கோயம்புத்தூர் தம்பதி. கைதானவர்களை ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

 

The post ஈசிஆர் பண்ணை வீட்டில் வார இறுதி நாட்களில் கணவன் மனைவியை மாற்றி பாலியல் தொழில்: கோவை தம்பதி உட்பட 10 பேர் கைது: 8 பெண்கள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : ECR ,Coimbatore ,CHENNAI ,Dinakaran ,
× RELATED காரில் போதை பவுடருடன் வந்த அதிமுக...