×

மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு முத்துமாரியம்மன் கோயிலில் சாமி வீதி உலா

 

புதுக்கோட்டை, நவ.6: புதுக்கோட்டை கீழ 4ம் வீதி வடபுறம் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு சாமி வீதி உலா நடந்தது. புதுக்கோட்டை கீழ 4ம் வீதி வடபுறம் அமைந்துள்ள  முத்துமாரியம்மன் கோயிலில் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து தினமும் அபிஷேகங்களும், ஆராதனையும் நடந்தது. அதனை தொடர்ந்து மண்டல பூஜை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முத்துமாரியம்மனுக்கு பாலாபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மாலை அலங்காரத்திலும், தீபாராதனை நடைபெற்றது.

அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் சந்தனக்காப்பு மலர் அலங்கரித்தில், மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் உற்சவர் விநாயகர், சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை,  முத்துமாரியம்மன் மேளதாளத்துடன் வீதி உலா வந்தது. பக்தர்கள் தங்களது வீட்டு வாசலில் சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

The post மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு முத்துமாரியம்மன் கோயிலில் சாமி வீதி உலா appeared first on Dinakaran.

Tags : Sami Road ,Muthumariamman Temple ,Mandala Abhishek ,PUDUKKOTA ,MUTHUMARYAMMAN TEMPLE ,MANDALAPHISHEKA ,Mandala Abisheka ,
× RELATED திருத்துறைப்பூண்டி அருகே...