×

காட்டுப்பன்றி வேட்டையாடி கூறுபோட்ட ஆசாமி சிக்கினார்; 48 ஆயிரம் அபராதம் வசூல்

 

தண்டராம்பட்டு, நவ.6: தண்டராம்பட்டு அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடி கூறுபோட்ட ஆசாமி வனத்துறையினர் ரோந்து பணியில் சிக்கினார். அவருக்கு 48 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி பகுதியில் வனசரகர்கள் செல்வம், குமார், தட்சணாமூர்த்தி, வனக்காப்பாளர்கள் மோகன், அரவிந்த், பாலமுருகன் ஆகியோர் நேற்று காலை ராயண்டபுரம் காப்புக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படி வந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி அதில் வந்தவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த வனத்துறையினர், அவர் வைத்திருந்த மூட்டையை சோதனையிட்டனர். அதில், காட்டு பன்றியை வேட்டையாடி அதன் இறைச்சியை வெட்டி கூறுபோட்டு விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.அதைத்தொடர்ந்து வனத்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அவர் இளையாங்கன்னி கிராமத்தை சேர்ந்த படித்துறை(55) என்பது தெரியவந்தது. தொடர்ந்து வனத்துறையினர் மாவட்ட வன அலுவலர் அருள்லால் உத்தரவின் படித்துறைக்கு 48 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர். மேலும், விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர்.

The post காட்டுப்பன்றி வேட்டையாடி கூறுபோட்ட ஆசாமி சிக்கினார்; 48 ஆயிரம் அபராதம் வசூல் appeared first on Dinakaran.

Tags : Asami ,Dandrampattu ,Dinakaran ,
× RELATED பாஜ ஓபிசி அணி மாநில செயலாளர்-...