×

மணல் கடத்தல் தடுக்க தவறிய எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்; வேலூர் எஸ்பி நடவடிக்கை

 

பொன்னை, நவ.6: மணல் கடத்தலை வீடியோ எடுத்த முன்னாள் ராணுவ வீரர் 4 பேரால் வெட்டப்பட்டார். இதையடுத்து கடத்தலை தடுக்க தவறியதற்காக, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எஸ்ஐயை ஆயுதப்படைக்கு மாற்றி வேலூர் எஸ்பி மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.வேலூர் மாவட்டம், பொன்னை அடுத்த கொக்கேரி கிராமத்தை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் உமாபதி. இவர் கடந்த 3ம் தேதி பொன்னையாறு அணைக்கட்டு பகுதியில் சிலர் மணல் கடத்துவதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதை பார்த்த மணல் கடத்தும் கும்பல் உமாபதியை ஓட, ஓட விரட்டி கொலை வெறியோடு சரமாரியாக வெட்டியது. இதில் உமாபதி படுகாயம் அடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த முனிசாமி, அவரது தம்பி குமரேசன் மற்றும் முனிசாமியின் மகன்கள் சூர்யா, பிரகாஷ் ஆகியோர் மீது மேல்பாடி போலீசார் கொலை வழக்கு மற்றும் மணல் திருட்டு வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து, கடந்த 3ம் தேதி குமரேசனை கைது செய்த நிலையில், மற்ற 3 பேரை தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர். மேலும், அவர்கள் பெங்களூருவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்து சென்றுள்ளனர்.இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் விரைந்து கைது செய்யக்கோரி தாக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் உமாபதியின் மனைவி நதியா மற்றும் அப்பகுதி மக்கள் நேற்று மேல்பாடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

The post மணல் கடத்தல் தடுக்க தவறிய எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்; வேலூர் எஸ்பி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : SI Armed Forces ,Ponnai ,SI ,Vellore ,Dinakaran ,
× RELATED ஊராட்சி செயலாளர், மனைவி மீது சொத்து...