×

பேரணாம்பட்டு அருகே அனுமதியின்றி பாஜ கொடியேற்ற முயற்சி; அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்

 

பேரணாம்பட்டு, நவ.6: பேரணாம்பட்டு அருகே அனுமதியின்றி பாஜ கொடியேற்ற முயன்றதை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த ஏரிகுத்தி ஊராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் மோகன். இவருக்கு பாஜ இளைஞர் அணி பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளதாம். எனவே, அவர் தனக்கு சொந்தமான இடத்தில் பாஜ கொடியேற்றும் விழாவுக்கு நேற்று ஏற்பாடு செய்துள்ளார். இதில், அக்கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். ஆனால், கொடியேற்றுவதற்கு உரிய அனுமதி பெறவில்லை.இதுகுறித்து தகவலறிந்த பேரணம்பட்டு சப்- இன்ஸ்பெக்டர் சரத்குமார், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ராமானுஜம் மற்றும் போலீசார், ஆர்ஐ கீதா, விஏஓ அருண்குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கட்சி கொடியேற்றுவதை தடுத்து நிறுத்தினர். இதனால் அதிகாரிகளிடம் பாஜவினர் வாக்குவாதம் செய்தனர்.

 

The post பேரணாம்பட்டு அருகே அனுமதியின்றி பாஜ கொடியேற்ற முயற்சி; அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர் appeared first on Dinakaran.

Tags : BJP ,Peranampattu ,Peranampatu ,Vellore district ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...