×

முன்னாள் அமைச்சர் கண்ணன் உயிரிழந்தார்

புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கண்ணன் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர் நேற்றிரவு உயிரிழந்தார். புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கண்ணன் (74). காங்கிரஸ் ஆட்சியில் சபாநாயகர், அமைச்சர், எம்பி என பதவிகள் வகித்தவர். காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி இரண்டு முறை புதிய கட்சிகள் துவங்கினார். 2016ம் ஆண்டு தேர்தலின் போது அதிமுகவுக்கு சென்றார். அதன்பிறகு, அதிமுகவில் இருந்து விலகி பாஜவில் சேர்ந்தார்.

பின்னர், பாஜவிலிருந்து விலகியதுடன் அரசியலில் இருந்தும் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நுரையீரல் தொற்றால் கண்ணன் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் புதுச்சேரி மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தி மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனியார் மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டு மருத்துவரிடம் விசாரித்தார்.

இதுதொடர்பாக கண்ணன் மகன் விக்னேஷ் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 1ம் தேதி ரத்த அழுத்த குறைவு மற்றும் சுவாச கோளாறு காரணமாக புதுச்சேரி மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தந்தை அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார். மேலும் நுரையீரலில் தொற்று ஏற்பட்டு சுவாசத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ள காரணத்தால் மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தும் பலனிக்காமல் உயிரிழந்தார். இவ்வாறு அதில் உள்ளது.

The post முன்னாள் அமைச்சர் கண்ணன் உயிரிழந்தார் appeared first on Dinakaran.

Tags : Former minister ,Kannan ,Puducherry ,former ,minister ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி...