×

பேருந்து நிறுத்த நிழற்கூடத்தில் ஜீப் மோதி 3 பேர் நசுங்கி பலி

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அரியூர்நாடு பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (43), விவசாயி. கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளத்திபாறை ஊர்வலம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (43), மரவியாபாரி. ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்தவர் ரகுநாதன் (40). இவர் கொல்லிமலை வனச்சரக்தில் வனவராக பணியாற்றி வந்தார். இவர்கள் 3 பேரும் நேற்றிரவு ஜீப்பில் கொல்லிமலையில் இருந்து ராசிபுரம் நோக்கி புறப்பட்டனர். பேளூக்குறிச்சி அருகே மோளப்பாளையம் பகுதியில் நள்ளிரவு 11.30 மணி அளவில் அதிவேகமாக வந்து கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த ஜீப், அங்குள்ள பேருந்து நிறுத்த நிழற்கூடத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஜீப்பின் முன்பகுதி நொறுங்கி இடிபாடுகளில் சிக்கி 3 பேரும் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர்.

அவ்வழியாக சென்றவர்கள் இதைப்பார்த்து பேளூக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ராசிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பலியான 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் நள்ளிரவில் எதற்காக ராசிபுரம் சென்றனர், எனவும் விசாரித்து வருகின்றனர். விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் உறவினர்கள் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post பேருந்து நிறுத்த நிழற்கூடத்தில் ஜீப் மோதி 3 பேர் நசுங்கி பலி appeared first on Dinakaran.

Tags : JEEP ,NAMAKKAL ,SELVAKUMAR ,KOLLIMALI ARYOORNADU REGION ,NAMAKKAL DISTRICT ,Kanniyakumari District Wetthparara Procession Area ,Dinakaran ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...