×

வரதட்சணை கொடுமை செய்த கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு

விருதுநகர், நவ. 5: விருதுநகர் அருகே சின்ன பேராலியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி(27). இவரது கணவர் குருசேஷசாத்திரி இருவருக்கும் திருமணம் செய்த நாள் முதல் அடிக்கடி பிரச்னை செய்து வழக்கு தொடர்ந்தும், பின் சமாதானம் ஆகியும் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவர் தனது தாய், தந்தை இருவருக்கும் தேவையான அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும் என தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

மேலும் மாமியார் மீனாட்சி, உறவினர் ராஜலட்சுமி இருவரும் வீடு புகுந்தது கிருஷ்ணவேணியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக ரூரல் போலீசில் கிருஷ்ணவேணி புகாரில் குருசேஷாத்திரி, மீனாட்சி, ராஜலட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post வரதட்சணை கொடுமை செய்த கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Krishnaveni ,Chinna Perali ,Khurusheshatri ,
× RELATED தணிக்கை குழு சார்பில் நெடுஞ்சாலைத்துறை பணிகள் ஆய்வு