×

பாக். விமான படை தளம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: ராணுவம் பதிலடியில் 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் விமாப்படை தளத்தின் மீது நேற்று அதிகாலை தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினார்கள். ராணுவம் நடத்திய தாக்குதலில் 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்களில் தீவிரவாதிகளின் தொடர் தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்கள் நடந்த சில மணி நேரங்களில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மியான்வாலியில் பாகிஸ்தான் விமான படையின் பயிற்சி தளத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த பயங்கர தாக்குதலில் இங்கு செயல்படாத நிலையில் இருந்த மூன்று விமானங்கள் சேதமடைந்துள்ளன. இந்த தாக்குதலை தொடர்ந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை பிடிக்கும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது. இதில் 9 தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது குறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமான படை பயிற்சி தளத்தின் மீது கோழைத்தனமான மற்றும் தோல்வியுற்ற தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து அச்சுறுத்தலை போக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கையில் 9 தீவிரவாதிகளும் நரகத்துக்கு அனுப்பப்பட்டனர். பாகிஸ்தான் விமான தளத்தின் செயல்பாட்டு நடவடிக்கை சொத்துக்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. செயல்படாத நிலையில் இருந்த 3 விமானங்கள் சேதமடைந்தன” என குறிப்பிடப்பட்டுள்ளது.

* டிஜேபி தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
பாகிஸ்தானின் விமானப்படை பயிற்சி தளத்தின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு, தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தானின் துணை அமைப்பான தெஹ்ரிக் ஐ ஜிகாத் பாகிஸ்தான் பொறுப்பேற்றுள்ளது.

The post பாக். விமான படை தளம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: ராணுவம் பதிலடியில் 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Pak ,ISLAMABAD ,Pakistan ,Air Force ,Dinakaran ,
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா