×

சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், தி.மு க. ஆட்சிப் பொறுப்பேற்றதும் மேற்கொண்ட பணிகளே அதற்குக் காரணம்.தூர்வாருதல், புதிதாக 876 கி.மீ.க்கு மழைநீர் வடிகால் அமைத்தது உள்ளிட்ட நமது அரசின் செயல்பாடுகளால் கனமழையின் தாக்கம் மக்களைப் பாதிக்காதவாறு தடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில நாட்களுக்குக் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு துணை நின்று பணியாற்ற வேண்டும். அமைச்சர் பெருமக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாநகராட்சி உயர் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் களத்தில் மக்களுக்குத் துணை நின்று பணியாற்றிடவும்.மக்களுக்குச் சிறு இன்னல் கூட ஏற்படாமல் தடுக்க திராவிடமாடல் அரசு இருக்கிறது என்ற நம்பிக்கையை மேலும் வலுப்படுத்திடுவோம்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chief Minister ,M.K.Stal ,M.K.Stalin ,
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...