×

தனியார் கூரியர் நிறுவனத்தில் ₹2 லட்சம் பணம் திருடிய ஊழியர் கைது

கள்ளக்குறிச்சி, நவ. 4: கள்ளக்குறிச்சி அருகில் உள்ள நீலமங்கலம் கிராம எல்லை பகுதியில் தனியார் டெலிவரி கூரியர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் வாணாபுரம் தாலுகா மேலபழங்கூர் கிராமத்தை சேர்ந்த தருமன் மகன் தசரதராமன்(28) என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தினசரி வசூல் ஆகின்ற பணத்தை ஊழியர் தசரதராமன் அதே நிறுவனத்தில் உள்ள லாக்கரில் வைத்து பாதுகாப்பு பொறுப்பு அலுவலராகவும் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 27ம்தேதி இரவு வசூல் ஆன பணம் ரூ.2 லட்சத்து 2 ஆயிரத்து 195ஐ லாக்கரில் வைத்துவிட்டு சென்றவர் மறுநாள் வந்து பணத்தை காணவில்லை என்று கூறியுள்ளார். நிறுவன ஊழியர்கள் விசாரணை செய்ததில் தசரதராமன்தான் அந்த பணத்தை திருடியது தெரியவந்தது. அதனையடுத்து தனியார் கூரியர் நிறுவனத்தில் லாக்கரில் வைக்கப்பட்ட பணத்தை திருடிய தசரதராமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி அதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர் அரவிந்த் என்பவர் கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து தசரதராமனை கைது செய்தனர்.

The post தனியார் கூரியர் நிறுவனத்தில் ₹2 லட்சம் பணம் திருடிய ஊழியர் கைது appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Neelamangalam ,Dinakaran ,
× RELATED கோடை விடுமுறை தினத்தையொட்டி...