×

லாரி மோதி கார் டிரைவர் உடல் நசுங்கி பலி

கூடுவாஞ்சேரி: வண்டலூர் அருகே கண்டிகையில் டிப்பர் லாரி மோதி கார் டிரைவர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். வண்டலூர் அடுத்த நல்லம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட வலம்புரி நகரை சேர்ந்தவர் ஆனந்த் (30). கார் டிரைவர். இவர் நேற்று மாலை வீட்டில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தில் கண்டிகை கூட்ரோட்டில் சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் நோக்கி அதிவேகமாக வந்த டிப்பர் லாரி இரு சக்கரவாகன்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில், ஆனந்த் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், ஆனந்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில், பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், லாரி டிரைவர் தங்கராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் நேற்று மாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

The post லாரி மோதி கார் டிரைவர் உடல் நசுங்கி பலி appeared first on Dinakaran.

Tags : Guduvanchery ,Kandigai ,Vandalur ,Dinakaran ,
× RELATED கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்...