×

போரூர் ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

பூந்தமல்லி: சென்னை போரூர் ஏரியில் வீராணம் குழாய்களுக்கு அருகே சடலம் ஒன்று மிதந்து கொண்டிருப்பதாக போரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ஏரியில் மிதந்து கொண்டிருந்த சடலத்தை மீட்க முயன்றனர். சடலத்தை மீட்க முடியாததால் மதுரவாயல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி விருகம்பாக்கம் மற்றும் மதுரவாயல் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தில் கயிறு கட்டி கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில், இறந்து கிடந்த நபர் சுமார் 30 வயதுடைய ஆண் என்பதும் உடல் முழுவதும் அழுகிய நிலையில் இருந்ததால் இறந்து இரண்டு நாட்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இறந்து போன நபர் யார், எந்த பகுதியைச் சேர்ந்தவர், முதுகில் பை மாட்டி கொண்டிருப்பதால் மேம்பாலத்தின் மேல் இருந்து ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரிக்கின்றனர்.

The post போரூர் ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Borur lake ,Poontamalli ,Borur ,Viranam ,Chennai.… ,
× RELATED மதுரவாயலில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றம்