×

பழைய பொருட்களை எரித்த காயலான் கடைக்காரர் பலி காட்பாடியில் நேற்றிரவு பரபரப்பு செல்போன் பேட்டரி வெடித்து சிதறியது

வேலூர், நவ.2: காட்பாடியில் நேற்றிரவு பழைய பொருட்களை எரித்தபோது, செல்போன் பேட்டரி வெடித்து காயலான் கடைக்காரர் பலியானார். வேலூர் மாவட்டம், கழிஞ்சூர் பகுதியை சேர்ந்த விநாயகமூர்த்தி(45). இவர் காட்பாடி கல்புதூர் பகுதியில் பழைய பொருட்களை வாங்கும் காயலான் கடை வைத்துள்ளார். நேற்றிரவு 8 மணியளவில் கடையை மூடுவதற்காக முன்பாக விநாயகமூர்த்தி பழைய பேப்பர் உள்ளிட்ட சில பொருட்களை தீயிட்டு எரித்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக தீயில் எரிந்து கொண்டிருந்த செல்போன் பேட்டரி திடீரென வெடித்து சிதறியது. இதில் முகத்தில் படுகாயமடைந்த விநாயகமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்த காட்பாடி போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பழைய பொருட்களை எரித்த காயலான் கடைக்காரர் பலி காட்பாடியில் நேற்றிரவு பரபரப்பு செல்போன் பேட்டரி வெடித்து சிதறியது appeared first on Dinakaran.

Tags : Kayalan ,Vellore ,Katpadi ,Vellore district ,Bali Gadbadi ,Dinakaran ,
× RELATED காட்பாடியில் அகற்றிய சில மாதங்களில்...