×

கார் மோதிய விபத்தில் பெயிண்டர் பலி

மல்லசமுத்திரம், நவ.2: மல்லசமுத்திரத்தில் அதிகாலை டீக்கடைக்கு சென்று வந்த பெயிண்டர் கார் மோதி உயிரிழந்தார். காரை ஓட்டிவந்த கோயில் பூசாரியை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஈஸ்வரன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் மேகநாதன்(42). பெயிண்டரான இவரது மனைவி பூங்கொடி(32). இவர்களுக்கு தன(15) என்ற மகள் உள்ளார். நேற்று அதிகாலை எழுந்த மேகநாதன் வழக்கம்போல் டீக்கடைக்கு சென்றுள்ளார். டீ குடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக சென்ற கார் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட மேகநாதன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவ்வழியாக சென்றவர்கள் மல்லசமுத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மேகநாதன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிந்து காரை ஓட்டி வந்த மல்லசமுத்திரத்தைச் சேர்ந்த பூசாரி மகாதேவன்(45) என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

The post கார் மோதிய விபத்தில் பெயிண்டர் பலி appeared first on Dinakaran.

Tags : Mallasamutram ,Dinakaran ,
× RELATED அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு