×

கூடலூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கூடலூர்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நீண்ட நாள் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கூடலூர் தாலுகா அலுவலகம் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் சுனில், சிவபெருமாள் ஆகியோர் தலைமை வகித்தனர். நிர்வாகிகள் முருகேசன், சலீம் சஜி மல்லேஸ்வரன், செந்தில் உள்பட பலர் கோரிக்கை விளக்க உரையாற்றினர்.

The post கூடலூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Jacto Jio ,Cuddalore ,
× RELATED ஜாக்டோ-ஜியோ கோரிக்கை ஆசிரியர், அரசு...