பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை தாலுகாவிற்குட்பட்ட ஊராட்சிகளில், உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடந்தது. இதில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாட்களில் கிராமசபைக் கூட்டம் நடத்தப்படுகிறது. மேலும், கிராமப்பகுதிகளுக்கு அரசு அறிவிக்கும் புதிய திட்டம் மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்க சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டு, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. இதில், நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி தினத்தையொட்டி,அந்தந்த ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்த, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறபித்தார்.
The post பக்தர்கள் பூவோடு எடுத்து வழிபாடு உள்ளாட்சி தினத்தையொட்டி சிறப்பு கிராம சபைக் கூட்டம் பெண்கள் திரளாக பங்கேற்பு appeared first on Dinakaran.