×

பழைய பிரியாணியை சூடு செய்து புதிய பிரியாணியுடன் கலப்பு வலைதளத்தில் வீடியோ வைரல் சேத்துப்பட்டு தேவிகாபுரம் அசைவ ஓட்டலில்

சேத்துப்பட்டு, நவ. 1: சேத்துப்பட்டு தேவிகாபுரம் அசைவ ஓட்டலில் பழைய பிரியாணியை சூடு செய்து புதிய பிரியாணியுடன் கலக்கும் வீடியோ வைரலாகி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரத்தில் வடக்கு மாவட்ட வீதியில் தனியார் ஓட்டல் உள்ளது. இந்த கடையில் சுத்தம் சுகாதாரம் என்பது அறவே கிடையாது. இங்கு புகை மூட்டமும், துர்நாற்றமும் வீசுகிறது. இந்த கடையில் பழைய மீந்து போன பிரியாணியை எடுத்து வைத்து அதனை சூடு செய்து மீண்டும் புதிய பிரியாணியில் கலந்து விற்பனை செய்வது தற்போது வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதனால் அசைவ பிரியர்கள் அச்சத்தில் உள்ளனர். இதேபோன்று இப்பகுதியில் உள்ள பேக்கரிகளில் சுத்தம் சுகாதாரம் இல்லாமல் கேக் லட்டு போன்ற இனிப்பு வகைகளில் புழு உருவாகி உள்ளது. மேலும் ஈக்கள், தேனீக்கள், வண்டு ஆகியவை நெளிந்து கொண்டிருப்பதும் வீடியோ வைரலாக வெளியாகி உள்ளது. இந்த வீடியோக்களை பார்க்கும் ஒவ்வொருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இங்கு அசைவ ஓட்டகளில் பழைய உணவுகளை சூடு செய்து விற்பதும், சிக்கன் போன்றவைகள் ப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்துவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. பாஸ்ட்புட் வகைகள் விரும்பி சாப்பிடும் அசைவ பிரியர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகிறது. சேத்துப்பட்டு பஜார் வீதியில் உள்ள ஓட்டல்களில் சுத்தம் சுகாதாரம் என்பது இல்லை. எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் அசைவ ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பழைய பிரியாணியை சூடு செய்து புதிய பிரியாணியுடன் கலப்பு வலைதளத்தில் வீடியோ வைரல் சேத்துப்பட்டு தேவிகாபுரம் அசைவ ஓட்டலில் appeared first on Dinakaran.

Tags : Devikapuram ,Sethupattu Devikapuram ,Sethupattu ,Devigapuram ,Dinakaran ,
× RELATED சேத்துப்பட்டு மாதாமலையில் வேன் தலைகீழாக கவிழ்ந்து 10 பேர் காயம்