×

நடப்போம் நலம்பெறுவோம் நிகழ்ச்சி 4ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

 

விருதுநகர், நவ.1: விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்ட தகவல்: விருதுநகர் மாவட்டத்தில் வரும் நவ.4 அன்று மாநில அளவில் ஒவ்வொரு மாவட்ட தலைநகரில் நடப்போம் நலம்பெறுவோம் என்ற 8 கி.மீ தூர நடைபயிற்சியை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
விருதுநகர் மாவட்டத்தில் நடப்போம் நலம் பெறுவோம் என்ற நடைபாதையை முதற்கட்டமாக சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு செய்து தேர்வு செய்தார்.

பின் மரம் நடும் பணிகள், குடிநீர் வசதிகள், நடப்பாளர்கள் அமரும் இருக்கை உள்ளிட்ட ஏற்பாடுகள் ஒவ்வொரு கி.மீ தூரத்திற்கும் செய்யப்பட்டு முன்னேற்பாடு பணிகள் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநுர் மேற்பார்வையில் செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் நவ.4ல் நடப்போம் நலம் பெறுவோம் நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

நடைபயிற்சி மருத்துவக்கல்லூரியில் துவங்கி மகளிர் காவல் நிலையம் வழியாக காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் வழியாக சென்று, கலெக்டர் அலுவலக வாயில் வழியாக வெளியே சென்று ஐஸ்வர்யா மகாலில் இருந்து திரும்பி பின் மருத்துவக்கல்லூரியில் நிறைவடைகிறது. எனவே அனைவரும் நடப்போம் நலம் பெறுவோம் என்ற நடைப்பயிற்சியில் பங்கேற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post நடப்போம் நலம்பெறுவோம் நிகழ்ச்சி 4ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Jayaseelan ,Virudhunagar district ,
× RELATED மே 1ல் டாஸ்மாக் அடைப்பு