×

வாங்கடே அரங்கில் டெண்டுல்கர் சிலை

மும்பை: மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரின் சிலை, மும்பை வாங்கடே அரங்க வளாகத்தில் இன்று திறந்துவைக்கப்படுகிறது. இந்த ஸ்டேடியத்தில் உள்ள ஒரு பார்வையாளர் மாடத்துக்கு ஏற்கனவே சச்சின் பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், கடந்த ஏப்ரலில் அவர் 50வது பிறந்தநாளை கொண்டாடியதையொட்டி அந்த கேலரிக்கு பக்கத்திலேயே சிலையை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தியா – இலங்கை அணிகள் மோதும் லீக் ஆட்டம் நாளை நடக்க உள்ள நிலையில், இன்று சச்சின் சிலை திறப்பு விழா நடைபெறுகிறது.

இவ்விழாவில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் பட்நவிஸ், பிசிசிஐ செயலர் ஜெய் ஷா, பொருளாளர் ஆஷிஷ் ஷிலார், மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். சச்சினும் கலந்து கொள்கிறார். இந்த சிலையை மாகாராஷ்டிர மாநிலம் அகமத்நகரை சேர்ந்த பிரபல சிற்பி/ஓவியர் பிரமோத் காம்ப்ளே வடிவமைத்துள்ளார்.

The post வாங்கடே அரங்கில் டெண்டுல்கர் சிலை appeared first on Dinakaran.

Tags : Tendulkar ,Wangade Arena ,MUMBAI ,Sachin Tendulkar ,Dinakaran ,
× RELATED மும்பையில் கடல் சீற்றமாக இருக்கும்;...