×

மருதாநதி நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிட நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவு!

திண்டுக்கல்: மருதாநதி நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிட நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். நவ.1 முதல் 120 நாட்களுக்கு பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு விநாடிக்கு 20 கனஅடி மிகாமல் நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் 30 நாட்களுக்கு மறைமுக மற்றும் புதிய ஆயக்கட்டுக்கு நாள் ஒன்றுக்கு 70 கனஅடி வீதம் நீர் திறக்க ஆணையிடப்பட்டது. நீர் திறப்பின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 6,583 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

The post மருதாநதி நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிட நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,Water Resources Department ,Marudanadi Reservoir ,Marudhanadi reservoir ,Dinakaran ,
× RELATED அனைத்து நீர்த்தேக்கங்களிலும் இருப்பு...