×

நெய்வேலி அருகே லாரி மீது பஸ் மோதி 21 பேர் படுகாயம்

வடலூர், அக். 31: நெய்வேலி அருகே பெரியாக்குறிச்சியில் லாரி மீது பஸ் மோதிய விபத்தில் 21 பேர் படுகாயம் அடைந்தனர். கடலூரில் இருந்து விருத்தாசலத்திற்கு நேற்று மதியம் தனியார் பஸ் 70 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. சத்திய சுந்தரம் என்பவர் பஸ்சை ஓட்டி வந்தார். அதிவேகமாக வந்த இந்த பஸ் நெய்வேலி அருகே பெரியாக்குறிச்சி அருக வந்தபோது ஸ்டேரிங் திடீரென்று பழுதானதால் சாலையோரம் நின்ற லாரி மீது மோதி நின்றது. இதில் நெய்வேலி, விருத்தாசலம் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த பெரியசாமி (56), மகாலட்சுமி (40), திலகவதி (38), சாந்தி (49), ஆனந்தராஜ் (42), இந்திராணி (51), செல்வி (29), தம்புசாமி (60), வசந்தா (55), சின்னதுரை (60), ராதிகா (28) உள்ளிட்ட 8 ஆண்கள், 13 பெண்கள் உட்பட 21 பேர் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மந்தாரக்குப்பம் போலீசார் காயமடைந்த அனைவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 14 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post நெய்வேலி அருகே லாரி மீது பஸ் மோதி 21 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Neyveli ,Vadalore ,Periyakurichi ,Neyveli.… ,Dinakaran ,
× RELATED மந்த நிலையில் நடந்து வரும் சாலை...