×

காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் ஆத்திரம் மனைவியை கத்திரிக்கோலால் சரமாரியாக குத்திய கணவன்: பல்லாவரம் அருகே பரபரப்பு

பல்லாவரம்: காவல் நிலையத்தில் தன்மீது புகார் அளித்ததால், ஆத்திரத்தில் மனைவியை கத்திரிக்கோலால் சரமாரியாக குத்துவிட்டு தலைமறைவான கணவனை போலீசார் தேடி வருகின்றனர். பல்லாவரம் அடுத்த பம்மல், காமராஜபுரம், ராஜிவ்காந்தி சாலை செக்போஸ்ட் தெருவை சேர்ந்தவர் தேவா (35). இவருக்கு சங்கீதா (32) என்ற மனைவியும், லக்சனாஸ்ரீ (4) என்ற மகளும், ரிதிஷ் (3) என்ற மகனும் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் அதே பகுதியில் கட்டிட வேலை செய்து வந்தனர். இவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த 2 மாதங்களுக்கு முன், கணவரை பிரிந்த சங்கீதா, தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். கடந்த 26ம் தேதி மகள் லக்சனாஸ்ரீக்கு ஆதார் கார்டு எடுப்பதற்காக, சங்கீதா தனது மகளுடன் பம்மல் பிரதான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின் தொடர்ந்து வந்த கணவன் தேவா, மனைவி சங்கீதாவிடமிருந்து மகள் லக்சனாஸ்ரீயை கண்ணிமைக்கும் நேரத்தில் தூக்கிச்சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த சங்கீதா, தனது மகளை மீட்டு தருமாறு பல்லவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தேவாவை செல்போனில் தொர்பு கொண்டபோது, கள்ளக்குறிச்சியில் இருப்பது தெரிந்தது. அவரை பல்லவாரம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு கூறினர். அதன்பேரில் கணவன் – மனைவி இருவரும் நேற்று முன்தினம் பல்லாவரம் காவல் நிலையம் அருகே நடந்து வந்தனர். அப்போது தேவா, மனைவி சங்கீதாவிடம் நீ உயிரோடு இருந்தால் தானே என் மீது புகார் கொடுப்பாய், உன்னை என்ன செய்கிறேன் பார் என்று ஆவேசமாக கூறி, மறைத்து வைத்திருந்த கத்திரிக்கோலை எடுத்து, சங்கீதாவை சரமரியாக குத்திவிட்டு தப்பி சென்றார். சங்கீதாவின் அலறல் சத்தம்கேட்டு ஓடிவந்த போலீசார், பலத்த காயமடைந்த சங்கீதாவை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சங்கீதா சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மனைவியை கத்திரிகோலால் குத்திவிட்டு தப்பியோடிய தேவாவை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் ஆத்திரம் மனைவியை கத்திரிக்கோலால் சரமாரியாக குத்திய கணவன்: பல்லாவரம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Pandemonium ,Pallavaram ,
× RELATED வேட்பாளர் முன்னிலையில் அதிமுகவினர்...