×

மராத்தா இட ஒதுக்கீடு விவகாரம் 2 எம்பிக்கள் ராஜினாமா

மும்பை: மகாராஷ்டிராவில் மராத்தாக்களுக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் 16 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில், மராத்தாக்களுக்கு இட ஒதுக்கீடு கோரி அந்த சமூகத்தை சேர்ந்த மனோஜ் ஜராங்கே சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளார். மராத்தாக்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து, இவர்களுக்கு ஆதரவாக ஷிண்டே ஆதரவு சிவசேனா எம்பிக்கள் ஹேமந்த் பாட்டீல், ஹேமந்த் கோட்சே ஆகியோர் நேற்று திடீரென ராஜினாமா செய்தனர். போராட்டக்காரர்கள் தேசியவாத காங்கிரஸ் அலுவலகங்கள், பீட் தொகுதி எம்எல்ஏவின் வீட்டுக்கு தீ வைத்தனர்.

The post மராத்தா இட ஒதுக்கீடு விவகாரம் 2 எம்பிக்கள் ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Maratha ,Mumbai ,Maharashtra ,Marathas ,Dinakaran ,
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...