- புத்தூர் ஊராட்சி
- ஏ கிருஷ்ணசாமி
- சட்டமன்ற உறுப்பினர்
- திருவள்ளூர்
- தமிழ்
- தமிழ்நாடு
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- திருவள்ளூர் யூனியன்
- A.Krishnaswamy
- தின மலர்
திருவள்ளூர்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருவள்ளூர் ஒன்றியம், புட்லூர் ஊராட்சியில் 1,200 மீட்டர் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை திமுக ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன் நேரில் சென்று சாலை அமைக்கும் பணியை பார்வையிட்டார். புட்லூர் ஊராட்சியில் உல்லாச நகர், கணேஷ் விஸ்தா நகர் ஆகிய பகுதிகளில் இருந்து புட்லூர் ரயில் நிலையம் செல்வதற்கு சாலை வசதி சரியாக இல்லை என்றும், மழைக்காலங்களில் வாகனங்களை இந்த சாலையில் ஓட்ட முடியாத நிலை உள்ளது என்றும் உடனடியாக சாலையை அமைத்து தருமாறும் பொதுமக்கள் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமியிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமியின் முயற்சியால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.73 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. தரமான முறையில் சாலை அமைக்கப்படுகிறதா என்பதனை திமுக ஒன்றிய செயலாளர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டார். அப்போது அவருடன் மாவட்ட பிரதிநிதி ராமச்சந்திரன் கிளை செயலாளர் லாசர், விஜய் ஆனந்த், தினேஷ் ஆகியோர் உடனிருந்தனர். கோரிக்கையை ஏற்று பிரம்மாண்டமான சாலை அமைக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.
The post புட்லூர் ஊராட்சியில் ரூ.73 லட்சத்தில் தார் சாலை: ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ நடவடிக்கை appeared first on Dinakaran.