×

தூத்துக்குடியில் முன்விரோதத்தில் வாலிபரை கத்தியால் தாக்கி மிரட்டல் விடுத்த 2 பேர் கைது

தூத்துக்குடி, அக்.29: தூத்துக்குடியில் முன்விரோதத்தில் கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி கால்டுவெல் காலனியை சேர்ந்த சுந்தரவேல் மகன் ஆறுமுகசாமி (42). இவருக்கும், தூத்துக்குடி கருணாநிதி நகரை சேர்ந்த ரமேஷ் மகன் விமல் (25) என்பவருக்கும் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்துவந்தது. கடந்த 26ம்தேதி தூத்துக்குடியில் திருச்செந்தூர் ரோடு பகுதியில் ஆறுமுகசாமி நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த விமல் மற்றும் அவரது உறவினரான தூத்துக்குடி கருணாநிதிநகரை சேர்ந்த முனியசாமி மகன் மாயாண்டி(32) ஆகிய இருவரும் சேர்ந்து ஆறுமுகசாமியிடம் தகராறில் ஈடுபட்டதோடு கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். பின்னர் இதுகுறித்து ஆறுமுகசாமி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த தூத்துக்குடி தென்பாகம் எஸ்ஐ சிவக்குமார், மிரட்டல் விடுத்த விமல், மாயாண்டி ஆகிய இருவரையும் கைது செய்தார்.

The post தூத்துக்குடியில் முன்விரோதத்தில் வாலிபரை கத்தியால் தாக்கி மிரட்டல் விடுத்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Thoothukudi ,Caldwell ,
× RELATED தூத்துக்குடியில் வீட்டிற்கு வெளியே புதைத்த தாயின் சடலம் தோண்டி எடுப்பு..!!