×

பைக் விபத்தில் 2 பேர் படுகாயம்

களக்காடு,அக்.29: களக்காடு அருகே பைக் விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.ராதாபுரம் அருகே சமூகரெங்கபுரத்தை சேர்ந்தவர் சூர்யநரேஷ்குமார் (21). சம்பவத்தன்று இவரும், திசையன்விளையை சேர்ந்த முருகன் மகன் வீரகாளிமுத்துவும் (20) பைக்கில் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலுக்கு சென்றனர். பின்னர் ஊருக்கு பைக்கில் திரும்பி கொண்டிருந்தனர். பைக்கை வீரகாளிமுத்து ஓட்டினார். சூர்யநரேஷ்குமார் பின்னால் அமர்ந்திருந்தார். திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயில் செல்லும் சாலையில் உள்ள தரை பாலத்தில் பைக் வந்த போது, திடீரென பைக் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் வீரகாளிமுத்து, சூர்யநரேஷ்குமார் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவ்வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து இருவரும் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post பைக் விபத்தில் 2 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Kalakadu ,Kalakkad ,Suryanaresh Kumar ,Samukarengapuram ,Radhapura ,
× RELATED மாவடியில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு