- திருச்செங்கோடு
- திருச்செங்கோடு கூட்டுறவு சங்கம்
- திருச்செங்கோடு வேளாண்மை தயாரிப்பாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம்
திருச்செங்கோடு, அக்.29: திருச்செங்கோடு கூட்டுறவு சங்கத்தில், ₹25 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனையானது. திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைமையகத்தில், மஞ்சள் விற்பனை டெண்டர் மூலம் நடைபெற்றது. மஞ்சளை ஜேடர்பாளையம் சோழசிராமணி, இறையமங்கலம், சங்ககிரி, எடப்பாடி, கொளத்தூர், ஓமலூர், அரூர், பொம்மிடி, ஊத்தங்கரை, கொடுமுடி பாசூர், அந்தியூர், துறையூர் தம்மம்பட்டி, உப்பிலியாபுரம், ராயவேலூர், செய்யார், தலைவாசல், கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொண்டு வந்தனர். விரலி மஞ்சள் ₹10,386 முதல் ₹14,163 வரையும், கிழங்கு மஞ்சள் ₹9376 முதல் ₹11,322 வரையும் விற்பனையானது. மொத்தம் 500 மூட்டை ₹25 லட்சத்திற்கு விற்பனையானது.
The post ₹25 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை appeared first on Dinakaran.