×

ஜல்லிக்கற்கள் கடத்திய 2 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி, அக்.29: ராயக்கோட்டை ஆர்ஐ ரேணுகாதேவி மற்றும் அதிகாரிகள், கீழமங்கலம் சாலையில் உள்ள முள்ளுக்குறிச்சி பகுதியில், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற டிப்பர் லாரியை சோதனை செய்தனர். அதில், 2 யூனிட் ஜல்லிக்கற்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து, ராயக்கோட்டை காவல் நிலையத்தில் அதிகாரிகள் புகார் தெரிவித்தனர். இதன் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து டிப்பர் லாரியுடன் 2 யூனிட் ஜல்லிக்கற்களை பறிமுதல் செய்தனர். மேலும், லாரி உரிமையாளரான எச்சனஅள்ளி பகுதியைச் சேர்ந்த கணேசன்(48), டிரைவரான காடுசெட்டிப்பட்டி சங்கர்(45) ஆகியோரை தேடி வருகின்றனர்.

The post ஜல்லிக்கற்கள் கடத்திய 2 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Rayakottai RI ,Renukadevi ,Mulkukurichi ,Geezamangalam road ,Dinakaran ,
× RELATED மாவட்டத்தில் நீட் தேர்வை 5,006 மாணவர்கள் எழுதினர்