×

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் 25 பேர் சிறைபிடிப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் பாக்ஜலசந்தி கடலில் மீன் பிடிக்க சென்றனர். 10 நாட்களுக்கு பிறகு ஏராளமான படகுகள் கடலுக்கு சென்ற நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் மீன் பிடிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், படகுகளை வழிமறித்து நிறுத்தியுள்ளனர். தொடர்ந்து தங்கச்சிமடத்தை சேர்ந்த மரியசியா, மெக்கன்ஸ் ஆகியோருக்கு சொந்தமானது உள்பட 3 விசைப்படகுகளை சிறைப்பிடித்தனர்.

மேலும் படகில் இருந்த கண்ணன், மணி, ரஜினி, பிரசாந்த், சீலன், ராஜா, சுசித், மெக்கன்ஸ் உள்பட 25 மீனவர்களையும் சிறை பிடித்து, அங்கேயே விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. விசாரணைக்கு பின் மீனவர்கள் அனைவரும் கைப்பற்றப்பட்ட 3 விசைப்படகுகளுடன் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் சில படகுகளும் கடற்படையினரிடம் சிக்கி உள்ளதாகவும் மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. 10 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்ற நிலையில் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டது ராமேஸ்வரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் 25 பேர் சிறைபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Sri Lankan Navy ,Rameswaram ,Bagjalasandi ,
× RELATED இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 3 தமிழக மீனவர்கள் விடுவிப்பு