×

சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது மர்மநபர்கள் தாக்குதல்; போலீசார் தீவிர விசாரணை

சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது கற்கள் மற்றும் பாட்டில்கள் வீசி மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை தியாகராய நகர் செவாலியர் சிவாஜி கணேசன் சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லம் உள்ளது. நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்மநபர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலக வளாகத்தில் கற்கள் மற்றும் பாட்டில்கள் வீசி கூச்சலிட்டு தப்பி சென்றனர்.இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயளாலர் முத்தரசனின் ஓட்டுனர் காவல்துறை கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில், காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயளாலர் சிவா மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் உள்ள செவாலியர் சிவாஜி கணேசன் சாலை மற்றும் அதன் பின்புறம் உள்ள சாலையில் உள்ள கண்காணிப்பு சாலையி உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

The post சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது மர்மநபர்கள் தாக்குதல்; போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Communist Party of India ,Tiagaraya, Chennai ,Chennai ,Thyagaraya, Chennai ,
× RELATED மக்களவை தேர்தலில் படுதோல்வியை...