×

கிரானைட் குவாரி ஏலம் ஒத்திவைப்பு

மதுரை: மதுரை கலெக்டர் சங்கீதா நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா சேக்கிபட்டி, அய்யாபட்டி மற்றும் திருச்சுனை கிராமங்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில், தகுதி வாய்ந்த பலவண்ண கிரானைட் கற்களுக்கு குவாரி குத்தகை உரிமம் வழங்க விண்ணப்பிக்கும்படி, கடந்த அக். 3ம் தேதி மதுரை மாவட்ட அரசிதழில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் நிர்வாக நலன் கருதி அக். 31ம் தேதி நடைபெறுவதாக இருந்த கிரானைட் குவாரிகளுக்கான பொது ஏலம், நவ. 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.

The post கிரானைட் குவாரி ஏலம் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai Collector Sangeeta ,Madurai District ,Melur Taluk Sekipatti ,Ayyapatti ,Tiruchunai ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை