×

ரவுடியை காரில் கடத்தி வெட்டு: 5 வாலிபர்கள் கைது

பெரம்பூர்: அயனாவரம் தாகூர் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் அருண் (23). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது அயனாவரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் ஒரு போக்சோ வழக்கு உட்பட 5 வழக்குகள் உள்ளன. இவர், நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் அயனாவரம் விநாயகர் கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, காரில் வந்த மர்ம கும்பல், இவரை கடத்திச் சென்று கத்தியால் வெட்டி, பிறகு கீழே இறக்கி விட்டு சென்றது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். புகாரின்பேரில், அயனாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில், ஆவடி குமரன் நகரை சேர்ந்த மகேஷ் (எ) மண்ட மகேஷ் (27), அயனாவரம் பச்சைக்கல் வீராசாமி ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த ராகுல் (எ) விக்னேஷ் (23), அயனாவரம் பி.இ கோயில் தெருவை சேர்ந்த ஆலன் ஜோஸ்வா (23), திருவேற்காடு பகுதியை சேர்ந்த மோகன் (24), அயனாவரம் பகுதியை சேர்ந்த யஸ்வந்த் (23) ஆகிய 5 பேர் இந்த கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவர்களை பிடித்து விசாரித்தனர். அதில், கடந்த 2ம் தேதி காந்தி ஜெயந்திக்கு மதுக்கடைகள் இருக்காது என்ற காரணத்தினால் கள்ள சந்தையில் மது பாட்டில்களை விற்பனை செய்ய கடத்தலில் ஈடுபட்ட ராகுல் என்பவர் 8000 ரூபாயை அருணிடம் கொடுத்து மது பாட்டில்களை வாங்கி வர கூறியுள்ளார். அருண் மதுபாட்டில்களை வாங்கி வைத்துள்ளார். பின்னர், அருணிடம் மதுபாட்டில்களை ராகுல் கேட்டபோது, மது பாட்டில்களை போலீசார் எடுத்துச் சென்று விட்டதாக தெரிவித்தார். இதனை நம்பாத ராகுல், அருணிடம் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அவர் தராததால் ராகுல் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து அருணை கடத்தி, பணத்தைக் கேட்டு மிரட்டியதுடன் கத்தியால் வெட்டிவிட்டு மிரட்டி அனுப்பி வைத்தது தெரியவந்தது. இதையடுத்து, ராகுல் உள்ளிட்ட 5 பேரையும் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

The post ரவுடியை காரில் கடத்தி வெட்டு: 5 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Perambur ,Arun ,3rd Street, Ayanavaram Tagore Nagar ,Ayanavaram ,Dinakaran ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு