×

டெல்லியில் நடைபெறும் மெட்ரோ இரயில் நிறுவன கண்காட்சி அரங்கை ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி திறந்து வைத்தார்

டெல்லி: டெல்லியில் நடைபெறும் நகர்ப்புற கண்காட்சி அரங்கில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவன கண்காட்சி அரங்கை ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அவர்கள் திறந்து வைத்தார்

டெல்லியில் நடைபெற்று வரும் நகர்ப்புற நகர்வு இந்தியா (UMI) மாநாடு மற்றும் கண்காட்சி என்பது இந்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார துறை அமைச்சகத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி அவர்கள், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் கண்காட்சி அரங்கை திறந்து வைத்தார். அப்போது சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்ட பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்த கண்காட்சி 2023, அக்டோபர் மாதம் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாடு மற்றும் கண்காட்சி நகர்ப்புற போக்குவரத்துடன் தொடர்புடைய சிக்கல்களைத் தீர்க்க மாநில மற்றும் நகர்ப்புற அளவில் திறன்களை உருவாக்குவதற்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது. நிலையான போக்குவரத்து அமைப்புகளை உருவாக்குவதே இம்மாநாட்டின் நோக்கம். சிறந்த நகர்ப்புற போக்குவரத்து நடைமுறைகளுடன் புதுப்பித்த நிலையை உருவாக்குவதில் முக்கிய முடிவெடுப்பவர்கள் மற்றும் தொழில்நுட்ப பிரதிநிதிகள், வல்லுநர்கள், கல்வியாளர்கள், கட்டுமானம், தொழில்நுட்ப சேவை புரிவோர்கள், போக்குவரத்தில் உள்ள மற்ற பங்குதாரர்களுடன் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பை இந்த மாநாடு உருவாக்குகிறது. அவர்களின் நகர்ப்புற போக்குவரத்தை மேம்படுத்துதல் இதிலுள்ள பிரச்சனைகளை தீர்வுகாண நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கும் ஒரு மன்றமாகும்.

நகர்ப்புற போக்குவரத்து தொழில்நுட்பம் மற்றும் சிறந்த போக்குவரத்து திட்டங்களை செயல்படுத்துதல், புதிய யோசனைகளை பரப்புதல் அவற்றை காட்சிபடுத்துதல் இவையெல்லாம் UMI-இன் அம்சமாகும். சிறந்த கண்காட்சியாளர்கள் விருதுக்காக நடுவர் மன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். நகர்ப்புற போக்குவரத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு தேர்வு குழுவால் தேர்வு செய்யப்பட்டு சிறந்த நகர்ப்புற போக்குவரத்துக்கான விருது, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார துறை அமைச்சகத்தால் வழங்கப்படுகின்றது.

இந்த கண்காட்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர்கள் டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், ஏ.ஆர் ராஜேந்திரன், ஆண்டோ ஜோஸ், வெங்கடேஷ் காசி, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இணை இயக்குநரும், மக்கள் தொடர்பு அலுவலருமான எல். கிரிராஜன், மேலாளர் நிவேதிதா, துணை மேலாளர் (மக்கள் தொடர்பு) ஸ்ருதி, ஆர். அர்ச்சனா, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.

இந்த கண்காட்சியில் சென்னை, குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி, கொச்சி, பெங்களூரு மெட்ரோ மற்றும் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்றனர். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கில் பொழுதுபோக்கு நிகழ்வுகள், பயணிகளுக்கான வசதிகள், மெட்ரோ இரயிலின் உள்கட்டமைப்பு வசதிகள், சென்னை மெட்ரோ இரயிலின் திட்டம் கட்டம் 2-ன் கட்டுமான பணிகள் போன்ற பல்வேறு புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

The post டெல்லியில் நடைபெறும் மெட்ரோ இரயில் நிறுவன கண்காட்சி அரங்கை ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Hardeep Singh Puri ,Metro Rail Exhibition Hall ,Delhi ,Chennai Metro Rail Corporation Exhibition Hall ,Delhi Urban Exhibition Hall ,Metro Rail Corporation Exhibition Hall ,Dinakaran ,
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...