×

மதுரை மேம்பாலத்தில் இஸ்ரேல், இந்திய கொடி பொறித்த பேனர் பறக்கவிட்ட பாஜ நிர்வாகிகள் கைது: ஆர்எஸ்எஸ்காரரும் சிக்கினார்


மதுரை: மதுரை கோரிப்பாளையம் ஏவி மேம்பாலத்தில் இஸ்ரேல் மற்றும் இந்திய தேசியக்கொடி பதித்த பேனரை பறக்க விட்ட பாஜ நிர்வாகிகள் மற்றும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என மூவரை போலீசார் கைது செய்தனர். மதுரை, கோரிப்பாளையம் ஏவி மேம்பாலத்திற்கு நேற்று மாலை வந்த 3 இளைஞர்கள், இஸ்ரேல் மற்றும் இந்திய தேசிய கொடிகளுடன் பாரதம் இஸ்ரேலுடன் நிற்கிறது என்ற ஆங்கில வாசகம் அச்சிடப்பட்ட பேனரை பறக்க விட்டு கோஷம் எழுப்பினர். தகவல் அறிந்து அங்கு வந்த மதிச்சியம் போலீசார், அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள், மதுரை மாநகர் மாவட்ட பாஜ இளைஞரணி பொதுச்செயலாளர் ரகுபதி, மாநகர இளைஞரணி துணைத்தலைவர் சரத்குமார், ஆர்எஸ்எஸ் உறுப்பினர் பிரவின் என தெரியவந்தது. பாஜ இளைஞரணி நிர்வாகிகளின் நடவடிக்கையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post மதுரை மேம்பாலத்தில் இஸ்ரேல், இந்திய கொடி பொறித்த பேனர் பறக்கவிட்ட பாஜ நிர்வாகிகள் கைது: ஆர்எஸ்எஸ்காரரும் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : BJP ,Madurai ,RSS ,Goripalayam AV ,Dinakaran ,
× RELATED ஜனநாயகத்தின் மீது தொடர் தாக்குதல்...