×

ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் கோவையை சேர்ந்த தடகள வீரர் முத்துராஜா வெண்கலம் : மாஜி அமைச்சர் வேலுமணி வாழ்த்து!!

கோவை : ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில், கோவையை சேர்ந்த தடகள வீரர் முத்துராஜா வெண்கல பதக்கம் வென்றுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள பதிவில், சீனாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில், கோவையைச் சேர்ந்த தடகள வீரர் திரு. முத்துராஜா அவர்கள் ஆண்கள் குண்டு எறிதல் (Shot Put) F-55 பிரிவில் வெண்கல பதக்கம் வென்றிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு எனது பாரட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு உள்ளிட்ட அனைத்து தமிழக, இந்திய வீரர் வீராங்கனைகளுக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.தாங்கள் அனைவரும் வரும் காலங்களிலும் சர்வதேச அளவிலான போட்டிகளில் மேலும் பல சாதனைகளையும், பதக்கங்களையும் குவிக்க வாழ்த்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் கோவையை சேர்ந்த தடகள வீரர் முத்துராஜா வெண்கலம் : மாஜி அமைச்சர் வேலுமணி வாழ்த்து!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Muthuraja Vengalam ,Asian Para Games ,minister ,Velumani ,Muthuraja ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்