×

கொளப்பள்ளியில் காசநோய் விழிப்புணர்வு முகாம்

 

பந்தலூர்,அக்.27: பந்தலூர் அருகே கொளப்பள்ளி சேவியர் மட்டம் பகுதியில் காசநோய் கண்டறிதல் சிறப்பு முகாம் நடைபெற்றது. சுகாதாரத்துறை காசநோய் ஒழிப்பு திட்டம்,பந்தலூர் அரசு மருத்துவமனை காசநோய் பிரிவு கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம்,ஆல் தி சில்ட்ரன் ஒயிட் அரோ டிரஸ்ட் ஆகியன சார்பில் நடைபெற்ற முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.

ஆல் த சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன், சுகாதார ஆய்வாளர் கௌரி சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பந்தலூர் அரசு மருத்துவமனை காசநோய் பிரிவு மேற்பார்வையாளர் விஜயகுமார்,ரூபி,இராமநாதன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் காசநோய் சளி மாதிரி சேகரித்து எக்ஸ்ரே எடுத்தனர். முகாமில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் சுகாதார செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கொளப்பள்ளியில் காசநோய் விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : Kolapally ,Bandalur ,Kolappally Xavier Mattam ,Health Department ,Kolappalli ,Dinakaran ,
× RELATED தேவாலா பஜாரில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி மந்தம்