×

மகாராஷ்டிராவில் பயங்கரம்; இரு சாலை விபத்துகளில் 9 பேர் பலி; 25 பேர் காயம்


பீட்: மகாராஷ்டிராவில் நேற்றிரவு நடந்த 2 சாலை விபத்துகளில் 9 பேர் பலியாகினர். 25 பேர் காயமடைந்தனர். அகமதுநகர் நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்புலன்சில் நோயாளி உட்பட 4 பேர் பயணம் செய்தனர். அப்போது அதே சாலையில் பயணம் செய்த ஒரு லாரி, ஆம்புலன்ஸ் மீது வேகமாக மோதியது. இதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு சம்பவத்தில் ஒரு பஸ், மும்பையில் இருந்து பீட் நோக்கி பயணிகளுடன் சென்றது. பீட் விரைவு சாலையில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இதில் பஸ்சில் பயணம் செய்த 5 பேர் பலியாகினர். 25 பேர் காயமடைந்தனர். தவலறிந்து போலீசார் விரைந்தனர். இறந்தவர்கள் உடல்களை பிரேத பரிசோதனைக்காகவும், காயமடைந்தவர்களை சிகிச்சைக்காகவும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post மகாராஷ்டிராவில் பயங்கரம்; இரு சாலை விபத்துகளில் 9 பேர் பலி; 25 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Terror ,BEAT ,Maharashtra ,Ahmednagar… ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் பயங்கரம்; பால்குட...