×

பெட்ரோல் குண்டு வீச்சு.. அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சி: அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை: அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேறு யாரோ செய்த சதியாகவே கருதுகிறோம் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். ஆளுநர் மாளிகை வாயிலில் பெட்ரோல் குண்டு வீசியவர் ஏற்கனவே சிறையில் இருந்து விட்டு வந்துள்ளார். பெட்ரோல் குண்டு வீசியவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு எதிராக வெறுப்புணர்வு காட்டவில்லை. ஆளுநர்தான் தமிழ்நாட்டு மக்களிடம் வெறுப்புணர்வை பரப்பி வருகிறார் என்று புதுக்கோட்டையில் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

 

The post பெட்ரோல் குண்டு வீச்சு.. அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சி: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Ragupati ,Pudukkottai ,Minister of Law ,
× RELATED திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி...