×

கொசுக்கடியால் தொல்லை

காங்கயம்: காங்கயம் நகராட்சியில் உள்ள 18 வார்டுகளில், 16 ஆயிரம் வீடுகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் வசிக்கின்றனர். கடந்த வாரத்தில் மழை பெய்ததால் ஆங்காங்கு கழிவு நீர் தோங்கியுள்ளது. இதில் கொசுக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் மாலை நேரத்தில் இருந்து விடியும் வரை கொசுக்கள் மக்களை பாடய்படுத்தி விருகிறது என புலம்பி வருகின்றனர். சாக்கடை சுத்தம் செய்வதில் சுணக்கமாக உள்ளார்கள். இதனால் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த கொசு மருந்தும் சரிவர அடிப்பதில்லை. கொசுத்தொல்லை அதிகரித்தபடியே உள்ளது. கொசு மருந்து முறையாக அடிக்க வேண்டும் என நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கொசுக்கடியால் தொல்லை appeared first on Dinakaran.

Tags : Kangayam ,Dinakaran ,
× RELATED சூலூரில் போக்சோ வழக்கில் இருவர் கைது