×

குழந்தையுடன் தாய் மாயம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள பங்களாபுதூர், மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் தனபால்-சுமதி தம்பதி. இவர்களது 2வது மகள் கீர்த்தனாவுக்கு (24) கடந்த 3 வருடங்களுக்கு முன் கே.என்.பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் நேரிட்ட சாலை விபத்தில் கிருஷ்ணகுமாருக்கு அடிபட்டது. கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதனால், கீர்த்தனா குழந்தையுடன் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். கீர்த்தனா அடிக்கடி யாருடனோ போனில் பேசி வந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில், கடந்த 23ம் தேதி காலையில், ஏடிஎம்முக்கு சென்று வருவதாகக் கூறிவிட்டு குழந்தையுடன் புறப்பட்டுச் சென்ற கீர்த்தனா அதன்பின் வீடு திரும்பவில்லை.இதனால் சந்தேகமடைந்த கீர்த்தனாவின் பெற்றோர், அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.தொடர்ந்து, நண்பர்கள், உறவினர்கள் வீடுகள் என பல இடங்களில் தேடியும் கீர்த்தனாவும், குழந்தையும் கிடைக்கவில்லை. இது குறித்து, கீர்த்தனாவின் தாயார் சுமதி பங்களாபுதூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, குழந்தையுடன் மாயமான கீர்த்தனாவை தேடி வருகின்றனர்.

The post குழந்தையுடன் தாய் மாயம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Dhanapal ,Sumathi ,Mariamman Koil Road, Banglaputur ,Gobi, Erode District ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...