×

வாஷிங் மிஷினில் கடத்திய ரூ.1.30 கோடி பறிமுதல்: விசாகப்பட்டினத்தில் பரபரப்பு

திருமலை: விசாகப்பட்டினத்தில் வாஷிங் மிஷினில் கடத்திய ரூ.1.30 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் விமான நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சரக்கு ஆட்டோவில் புதிய வாஷிங் மிஷன்கள் கொண்டு செல்வதை பார்த்த போலீசார் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 6 வாஷிங் மிஷின்கள் புதிதாக ‘சீல்’ பிரிக்காமல் காணப்பட்டது. இதுகுறித்து போலீசார் டிரைவரிடம் விசாரணை செய்தனர். இதில், விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடா கொண்டு செல்வதாக கூறினார். விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடாவுக்கு வாஷிங் மெஷின்கள் ஆட்டோவில் கொண்டு செல்லப்படுமா?, என சந்தேகமடைந்த போலீசார் 6 வாஷிங் மிஷன்களையும் கீழே இறக்கி சோதனை செய்தனர். இதில், ரூ.1.30 கோடி ரொக்கம், 30 புதிய செல்போன்கள் இருந்தது தெரியவந்தது. அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.

The post வாஷிங் மிஷினில் கடத்திய ரூ.1.30 கோடி பறிமுதல்: விசாகப்பட்டினத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Vizag ,Tirumala ,Visakhapatnam ,Andhra Pradesh ,
× RELATED ஆந்திர மாநிலத்தில் அமராவதி சட்டமன்ற...