×

குரங்கின் உயிரை காப்பாற்றிய வாலிபருக்கு அதிகாரி பாராட்டு

பேரணாம்பட்டு: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த கோட்டச்சேரி பகுதியில் உயர் அழுத்த மின் கம்பத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு குரங்குகள் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஒரு குரங்கு மின் ஒயரில் பட்டு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து மயக்கம் அடைந்தது. இதை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த கூலி வேலை செய்யும் நிதிஷ் என்ற வாலிபர் உயிருக்கு போராடிய குரங்கு வாயில் தனது வாய் வைத்து மூச்சுக்காற்று கொடுத்தும், நெஞ்சு பகுதியை அழுத்தியும் கடுமையாக போராடினார். இதில் குரங்கு உயிர்பெற்று அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானைத தொடர்ந்து குரங்கின் உயிரை காப்பாற்றிய இளைஞர் நிதிஷை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர். இதுகுறித்த தகவலறிந்த வேலூர் மாவட்ட வன அலுவலர் காலநிதி நேற்று தனது அலுவலகத்திற்கு நிதிஷை நேரில் வரவழைத்து அவருக்கு பொன்னாடை அணிவித்தும், புத்தகம் பரிசாக வழங்கியும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

The post குரங்கின் உயிரை காப்பாற்றிய வாலிபருக்கு அதிகாரி பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Peranampatu ,Vellore district ,
× RELATED சர்ச் பாதிரியார் அதிரடி கைது மதமாற்றம் செய்ய முயன்றதாக பெண் புகார்