×

எடப்பாடி பழனிசாமி பிரதமர் ஆவாராம்… ராஜேந்திரபாலாஜி ‘லக லக…’

விருதுநகர்: சூழ்நிலை வந்தால் எடப்பாடி பழனிசாமியே பிரதமராகும் அளவுக்கு நல்ல தீர்ப்பை வழங்குங்கள்’ என முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசி உள்ளார். விருதுநகர் அருகே வடமலைக்குறிச்சியில் அதிமுக 52வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. விருதுநகர் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமரன் தலைமை வகித்தார். விழாவில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில், ‘‘அதிமுகவுக்கு 52 வயதாகிறது. தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உண்மையாக ஏழைகளுக்காக உழைக்கக்கூடிய புரட்சித்தமிழன். எம்ஜிஆரின் இதயத்தையும், ஜெயலலிதாவின் எண்ணத்தையும் செயல்படுத்தக் கூடியவர். நாட்டு மக்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். மக்கள் மாற்றத்தை விரும்பி திமுகவை தேர்ந்தெடுத்து விட்டனர்.

பாட்டாளி மக்கள், உழைப்பாளி மக்களின் கரத்தை வலுப்படுத்த வேண்டுமென்றால் நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி. இரட்டை இலைக்கு வாய்ப்பு அளியுங்கள். எடப்பாடி சொல்லுகின்ற பிரதமர், அல்லது சூழ்நிலை வந்தால் எடப்பாடியாரே பிரதமராக வரக்கூடிய அளவுக்கு ஒரு அற்புதமான தீர்ப்பை 40 தொகுதிகளிலும் தமிழ்நாட்டு மக்கள், இந்த பகுதி மக்கள் வழங்க வேண்டும். எடப்பாடியாரின் கரம் ஓங்கினால் டெல்லியிலே எடப்பாடியார் சொல்லக் கூடியது நடக்கும்’’ என்றார்.

The post எடப்பாடி பழனிசாமி பிரதமர் ஆவாராம்… ராஜேந்திரபாலாஜி ‘லக லக…’ appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Avaram… ,Rajendra Balaji ,Virudhunagar ,Minister ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்