×

திருக்கண்டலம் ஊராட்சியில் 1000 பனைவிதை நடும் விழா

பெரியபாளையம்: திருக்கண்டலம் ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏரிக்கரையில் 1000 பனைவிதைகள் நடும் விழாவை இன்று ஒன்றிய திமுக செயலாளர் ஆ.சத்தியவேலு துவக்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே திருக்கண்டலம் ஊராட்சியில் இன்று கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரிக்கரையில் 1000 பனைவிதைகள் நடும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், 5 அடி இடைவெளியில் தலா ஒரு பனைவிதை என மொத்தம் 1000 பனைவிதைகள் நடும் நிகழ்ச்சி ஏரிக்கரையை சுற்றிலும் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு திருக்கண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் மதன் சத்யராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் லிங்கதுரை மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

இதில், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆ.சத்தியவேலு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, ஏரிக்கரையை சுற்றிலும் பனைவிதை நடும் நிகழ்ச்சியை துவக்கிவைத்தார். இதில், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய பொருளாளர் கேஎஸ்எம்.குப்பன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் தியாகராஜன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சாம்கமலேஷ், ஊராட்சி இளைஞரணி அருண்குமார் உள்பட பலர் பங்கேற்று, ஏரிக்கரையை சுற்றிலும் பனைவிதைகளை நட்டு, அவற்றை உரிய முறையில் பராமரிப்பதாக உறுதியேற்றனர்.

The post திருக்கண்டலம் ஊராட்சியில் 1000 பனைவிதை நடும் விழா appeared first on Dinakaran.

Tags : Tirukandalam panchayat ,Periyapalayam ,Union DMK ,
× RELATED ஏரியில் அளவுக்கு அதிகமாக சவுடு மண்...