×

விவசாயியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

வடமதுரை, அக். 25: வடமதுரை அருகே உள்ள பிலாத்து மேற்குத் தெருவை சேர்ந்தவர் மகேஷ்(27). விவசாயியான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(39) என்பவருக்கும் இடையே கடந்த சில வருடங்களாக சொத்து பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மகேஷ் தனது வீட்டில் வளர்த்து வந்த பசு கோபாலகிருஷ்ணனின் தோட்டத்திற்குள் புகுந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்கள் மகேஷின் தாய் ருக்மணியை ஆபாசமாக பேசியுள்ளனர்.

இதனை மகேஷ் தட்டிக் கேட்ட போது அவர்கள் மகேஷை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மகேஷ் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மகேஷ் வடமதுரை போலீசில் அளித்த பேரில் கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்களான சுப்பையா(64), ஜெயலட்சுமி(35) ஆகிய 3 பேர் மீது வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post விவசாயியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Vadamadurai ,Mahesh ,Pilate West Street ,North Madurai ,Dinakaran ,
× RELATED வடமதுரை- ஒட்டன்சத்திரம் சாலையோரம்...